நின்னு போச்சா? அந்த பேச்சுக்கே இடமில்லை..’வாடிவாசல்’ பற்றி தாணு!!

kalaipuli thanu VAADIVASAL

வாடிவாசல் : தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மத்தியில் விடை தெரியாத ஒரு கேள்வியாக இருந்து வந்த ஒரு விஷயம் என்னவென்றால் வாடிவாசல் படம் உருவாகுமா?அதில் நடிகர் சூர்யா நடிப்பாரா இல்லையா என்பது பற்றி தான்.  ஏனென்றால், வெற்றிமாறன் இயக்கத்தில் இந்த படத்தில் சூர்யா நடிப்பார் எனவும், படத்தினை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிப்பார் எனவும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டு விட்டது.

இருப்பினும், படத்திற்கான டெஸ்ட் ஷூட்டிங் மட்டுமே எடுக்கப்பட்டு அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என ரசிகர்கள் காத்திருந்தார்கள். சூர்யாவும், வெற்றிமாறனும் அடுத்தடுத்து தங்களுடைய படங்களில் பிசியாக இருந்த காரணத்தால் கிட்டத்தட்ட வாடிவாசல் படம் நிறுத்தி வைக்கப்பட்டு விட்டதாகவே செய்திகள் வெளியானது.

இந்த நிலையில், நிச்சியமாக வாடிவாசல் படம் எடுக்கப்படும் என படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தெரிவித்துள்ளார். யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசிய அவர் ” வாடிவாசல் படத்துக்காக 3 நாட்கள் படப்பிடிப்பை நடத்தி சில ஆபத்தை எதிர்கொண்டோம். எனவே நாங்கள் மாற்று முறையை (சிஜி) பயன்படுத்துகிறோம்.

இதன் காரணமாக படம் எடுக்க சிறிது நேரம் ஆகும். இதற்கிடையில் வெற்றிமாறன் விடுதலை2 படத்தை முடித்து வாடிவாசல் படத்திற்கான வேலைகளில் இணைவார். எனவே படம் நின்று போய்விட்டது என்ற பேச்சுக்கு இடமில்லை. தேவையில்லாத வதந்திகளை நம்பவே வேண்டாம்” எனவும் கலைப்புலி தாணு தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்