வன்மம் கக்க பல பேர்…”துணையா இருந்த ஒரே ஆள்”! மனம் திறந்த பிரியங்கா!

வன்மம் கக்க பல பேர் இருந்தாலும் ஆரம்பத்தில் தனக்கு உறுதுணையாக இருந்தது அர்ச்சனா தான் என பிரியங்கா கூறியுள்ளார்.

priyanka deshpande

சென்னை : குக் வித் கோமாளி 5-வது சீசன் நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலக பிரியங்கா காரணமாக அமைந்த நிலையில், பிரியங்கா மீது எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்துள்ளது. நிகழ்ச்சியில் மணிமேகலையை அவருடைய தொகுப்பாளினி வேலையை செய்யவிடாமல் தன்னுடைய ஆதிக்கத்தை பிரியங்கா செலுத்தியுள்ளார். இதன் காரணமாக, நிகழ்ச்சியில் இருந்து தான் விலகுவதாக, வேதனையுடன் மணிமேகலை அறிவித்திருந்தார்.

இதனையடுத்து, சின்னத்திரையை சேர்ந்த அனிதா சம்பத், ஐஸ்வர்யா தத்தா, மோனிஷா,உள்ளிட்ட பலரும் மணிமேகலைக்கு ஆதரவாக குரல் கொடுத்து இருந்தார்கள். அதைப்போல, ஒரு பக்கம் நெட்டிசன்கள் மற்றும் மணிமேகலை ரசிகர்கள் பிரியங்காவை திட்டி தீர்த்து வருகிறார்கள். மற்றோரு பக்கம் பிரியங்கா ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோதே பிரியங்காவின் உண்மையான குணம் இது தான் என சக போட்டியாளர்கள் கணித்து அவரை திட்டவும் செய்திருந்த பழைய வீடியோவும், அர்ச்சனா பேசிய பழைய வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பிரியங்கா தனக்கு ஆரம்ப காலத்தில் சின்னத்திரையில் துணையாக இருந்தவர் பற்றி பெருமையாக பேசிய வீடியோவும் வைரலாகி கொண்டு இருக்கிறது. அதாவது, சினிமா துறையில் நுழைந்த ஆரம்ப காலகட்டத்தில், சரியாக உடை எங்கு சென்று வாங்குவது என்று கூட பிரியங்காவுக்கு தெரியாதாம். தெரியாமல் என்ன செய்யலாம் என குழப்பத்தில் இருப்பாராம்.

அந்த சமயம், தொகுப்பாளினி அர்ச்சனா கொஞ்சம் சின்னத்திரையில், பிரபலமாக இருந்த காரணத்தால்,ஆடை வடிவமைப்பாளர் ஒருவரை பிரியங்காவிற்கு அறிமுகம் செய்து வைத்தாராம். அது மட்டுமின்றி, பல சமயங்களில் அர்ச்சனா தான் பிரியங்காவுக்கு உறுதுணையாகவும் இருந்தாராம்.

முதல் முறையாக துணி எடுத்துக்கொடுத்து ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்து சென்றதும் அர்ச்சனா தானாம். அந்த சமயத்தில், இருந்து இப்போது வரை தன் மீது வன்மத்தை பலர் கக்கினாலும், தனக்கு எப்போதுமே உறுதுணையாக இருக்கும் ஒரே ஆள் அர்ச்சனா தான் என புகழ்ந்து பேசுகிறார் பிரியங்கா.

மேலும், மணிமேகலை நிகழ்ச்சியில் இருந்து விலகியதை தொடர்ந்து சின்னத்திரை பிரபலங்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். சின்னத்திரையில், பிரபலமாக இருக்கும் அர்ச்சனா இன்னும் இந்த பிரச்சனைக்குறித்து தனது கருத்தை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்