டிக்கெட்டை விற்பனை செய்து விட்டு படத்தை பார்க்க அனுமதிக்காத திரையரங்கம் !!அதிர்ச்சியில் ரசிகர்கள் !!!

Default Image

பேட்ட ,விஸ்வாசம் இன்று கோலாகலமாக திரையில் வெளியாகி வெற்றிகரமாக  ஓடிவருகிறது. இதனை ரசிகர்கள் குதூகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் மதுரவாயலில் உள்ள ஏ.ஜி.எஸ் திரையரங்கில் ரசிகர்கள் டிக்கெட்களை  ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர்.

ரசிகர்கள் பலரும் 7மணி காட்சிகளை முன்பதிவு செய்துள்ளனர். திரைப்படத்தை காண ரசிகர்கள் திரையரங்கிற்கு மிகுந்த சந்தோஷத்தில் வந்துள்ளனர். அப்போது தியேட்டர் ஊழியர்கள்  7மணி காட்சி கிடையாது, 10 மணி காட்சிதான் என்று கூறியிருக்கிறார்கள். இதனால் ரசிகர்கள் கடும் கோபத்தில் தியேட்டர் ஊழியர்களுடன்  வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை அறிந்து மதுரவாயல் போலீசார் அங்கு வந்தனர் . மேலும் அவர்கள் டிக்கெட் எடுத்த ரசிகர்களை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மதுரவாயல் போலீசார் அவர்கள் பேசுகையில் , வி.ஐ.பிக்களுக்காக வைக்கப்பட்டிருந்த 7 மணி காட்சி    டிக்கெட்டுகள் தவறுதலாக ஆன்லைனில் விற்பனை ஆகிவிட்டது.மேலும் டிக்கெட் எடுத்தவர்களை அடுத்த காட்சிக்கு அனுமதிப்பதாக தியேட்டர் நிர்வாகம் கூறியுள்ளது என்று அவர்களிடம் கூறியுள்ளனர்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்