நடிகர் ரிஷி கபூர் உயிரிழப்பதற்கு முன் அவர் கடைசியாக பேசிய வார்த்தை இதுதான்.
நடிகர் ரிஷி கபூர் இந்தி திரையுலகின் பிரபலமான நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் நடிகர் ராஜ் கபூரின் இரண்டாவது மகன் ஆவார். இவரது தந்தை நடிப்பில் வெளியான, ‘மேரா நாம் ஜோக்கர்’ என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
இந்நிலையில், நடிகர் ரிஷி கபூர் மூச்சு திணறல் காரணமாக, மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இவரது மராய்வுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
unknown nodeஇந்நிலையில், ரிஷி கபூர் மருத்துவமனையில் இருந்த போது, அவருடைய பாடல் ஒன்றை, அவருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் பாட, அவரது தலையில் ரிஷி கபூர் கை வைத்து வாழ்த்தி பேசுகிறார். இது தான் அவர் கடைசியாக பேசிய வார்த்தை. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.