நாய் வேடம் போட்டால் குரைத்து தான் ஆக வேண்டும்! தைரியப்படுத்திய அமலாப்பாலின் தந்தை!

Default Image

நடிகை அமலாபால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது, இவர் ஆடை படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவர் அரைநிர்வாண காட்சியில் நடித்துள்ளார்.

இதுகுறித்து நடிகை அமலாப்பால் அவர்கள் கூறுகையில், பெற்றோர் சம்ம்மதத்துடன் தான் ஆடை படத்தில் நடித்தேன். அம்மாவிடம் நிர்வாண காட்சியில் நடிக்க இருப்பதை கூறியவுடன், அதிர்ச்சியானதாக கூறியுள்ளார். பின் அவரது தாயார், அமலாபாலிடம், நல்ல கதையா? என்று கேட்டுள்ளார். நல்ல கதை என்றதுடன் அவரது தாயார் சம்மதம் தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து அவர் கூறுகையில், நாய் வேடம் போட்டால் குரைத்து தான் ஆகவேண்டும் என்றும், எந்த வேடத்திலும் நடிக்க தயங்காதே என்றும் அவரது தந்தை துணிச்சல் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்