கனா படம் குறித்து விவசாயிகள் கண்ணீர் மல்க நன்றி ….!!!
இயக்குனர் காமராஜ் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திக்கேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் கனா படம். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பல பிரபலங்கள் இந்த படம் குறித்து பாராட்டு தெரிவித்துள்ளனர்.
கனா படம் விவசாயிகள் குறித்து மிக சிறந்த கருத்துக்களை கூறியுள்ளது. இந்த படத்தை பலரும் பார்த்து அழுதுவிட்டு தான் திரையரங்கை விட்டு வெளிவருகின்றனர். இந்த படத்தில் பெண்களின் பெருமைகள் பற்றியும் கூறியுள்ளனர். மேலும் மகளீர் கிரிக்கெட்டையும் மையப்படுத்தி படம் எடுத்துள்ளனர்.
இந்நிலையில் இந்த படத்தை பார்த்த விவசாயிகள் பலரும் இயக்குனர் காமராஜ் மற்றும் நடிகர் சிவகார்த்திக்கேயனுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளனர்.