ரசிகரின் தந்தை மறைவு: நேரில் சென்று மரியாதை செலுத்திய சூர்யா.!

சூர்யா : அகில இந்திய சூர்யா நற்பணி இயக்கத் தலைவர் பரமுவின் தந்தை மறைந்ததையடுத்து நடிகர் சூர்யா நேரில் சென்று மரியாதை செலுத்தினார். நற்பணி இயக்கத் தலைவர்

Suriya - fans

சூர்யா :அகில இந்திய சூர்யா நற்பணி இயக்கத் தலைவர் பரமுவின் தந்தை மறைந்ததையடுத்து நடிகர் சூர்யா நேரில் சென்று மரியாதை செலுத்தினார். நற்பணி இயக்கத் தலைவர் பரமுவின் தந்தை ஆதிமூலம் என்பவர் ஜூலை 7ஆம் தேதி இயற்கை எய்தினார்.

அப்போது படப்பிடிப்பில் இருந்த சூர்யா வர இயலாததால், நேற்றிரவு செங்கல்பட்டில் உள்ள பரமுவின் இல்லத்தில் வைத்து அவரின் 16-ம் நாள் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. அதில் பங்கேற்ற நடிகர் சூர்யா பின்னர், அங்கிருந்த ஆதிமூலத்தின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

unknown node

சூர்யா தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘சூர்யா 44’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன்னதாக, சூர்யாவின் ‘கங்குவா’ திரைப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வரவுள்ளது.

இதனிடையே, நடிகர் சூர்யாவின் 49வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில், கங்குவா முதல் சிங்கிள் நாளை (ஜூலை 23, 2024) வெளியிடப்படும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.