லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி வெளியான விக்ரம் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று 300 கோடிக்கு மேல் வசூல் செய்து இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.
unknown nodeஇந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்திற்கான வேலையை தொடங்க திட்டமிட்டுள்ளார். அநேகமாக லோகேஷ் அடுத்தாக விஜய்யை வைத்து தான் படம் இயக்குவார் என நம்ப தகுந்த சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகிறார்கள்.
unknown nodeஎது, எப்படியோ இதற்கான விவிரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகே தெரியவரும். இந்நிலையில், விக்ரம் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக பல யூடியூப் சேனல்களுக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் பேட்டியளித்த வருகிறார்.
unknown nodeஅப்போது. சமீபத்திய ஒரு பேட்டியில், செய்தியாளர் ஒருவர் ” உங்களிடம் இருந்து ஒரு சூப்பர் ஹீரோ படத்தை எதிர்பார்க்கலாமா..? ” என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ் ” கண்டிப்பாக ..ஏனென்றால், ஏற்கனவே ” இரும்பு கை மாயாவி” எனும் சூப்பர் ஹீரோ கதை எழுதிவிட்டேன்” என்று கூறியுள்ளார்.
unknown nodeஇந்த கதை லோகேஷ் கைதி படத்திற்கு முன்பே சூர்யாவுக்காக எழுதியிருந்தார். படம் மிகப்பெரியது என்பதால், பிறகு பார்த்து கொள்ளலாம் என்று லோகேஷ் சூர்யாவிடம் சொன்னதாகவும் பல பேட்டிகளில் லோகேஷ் தெரிவித்திருந்தார். விரைவில் இரும்பு கை மாயாவி படம் உருவாகுமா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.