காதலியை கரம்பிடித்தார் பாடலாசிரியர் சினேகன்.!

கமல்ஹாசன் முன்னிலையில் பாடலாசிரியர் சினேகன் – நடிகை கன்னிகாவின்  திருமணம் நடைபெற்றுள்ளது.

கமல்ஹாசன் முன்னிலையில் பாடலாசிரியர் சினேகன் – நடிகை கன்னிகாவின்  திருமணம் நடைபெற்றுள்ளது.

பாடலாசிரியரும், மக்கள்நீதி மய்யம் கட்சியின் இளைஞரணி செயலாளருமான சினேகனும் நடிகை கன்னிகா ரவியும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்தனர். இதனை தொடர்ந்து இருவீட்டாரின் சம்மதத்துடன் இவர்களது திருமணம் இன்று நடைபெற்றுள்ளது.

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அனைவரது நலன் கருதி மிக எளிமையாகவும், தனிமனித இடைவெளியோடும், அரசு விதிமுறைகளோடும்  சென்னை வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் முன்னிலையில் இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. திருமண விழாவில், இயக்குநர் பாரதிராஜா உள்பட திரையுலக பிரமுகர்கள் மணமக்களை நேரில் வாழ்த்தியுள்ளனர். மேலும், ரசிகர்கள் சினிமா பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகின்றார்கள்.

பாடலாசிரியர் சினேகன் தமிழில் 700-மேற்பட்ட படங்களில் 2500கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். மேலும், கோமாளி, உயர்திரு 420, ராஜராஜ சோழனனின் போர்வாள் , பூமிவீரன், யோகி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். அதைபோல், நடிகை கன்னிகா ரவி சரித்திரம் பேசு, சத்திரபதி, தேவராட்டம், அடுத்த சாட்டை ஆகிய  படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

unknown nodeunknown node