நயன்தாரா நடித்து இருந்தகோலமாவு கோகிலாபடத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர்நெல்சன்அடுத்ததாகசிவகார்த்திகேயனைவைத்து புதிய படம் இயக்குவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
unknown nodeஇப்படத்தை முதலில்24 ஏஎம் ஸ்டுடியோஸ்தயாரிக்க இருந்தது. ஆனால், சில நிதி பிரச்சினை காரணமாக அவர்கள் படத்திலிருந்து விலக, தற்போது, சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனமே இப்படத்தை தயாரிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது, கூடுதல் தயாரிப்பாளராக சிவகார்த்திகேயனுடன் இணைந்துசோனி நிறுவனம்தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதன் மூலம் முதன் முதலாக தமிழ் திரைப்படத்தை சோனி பட நிறுவனம் தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாகநம்ம வீட்டுப் பிள்ளை, ஹீரோஎன வரிசையாக படங்கள் வேகமாக தயாராகி வருகின்றன.