நடிகர் கவுண்டமணியை நேரில் சந்தித்து நடிகர் சிவகார்த்திகேயன் புகைப்படம் எடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முந்திய காலகட்டத்தில் காமெடியில் கலக்கி ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் கவுண்டமணி. இவரது காமெடிகள் இப்போது பார்த்தால் கூட ரசிகர்கள் சிரித்துக்கொண்டே இருப்பார்கள். கடைசியாக இவரது நடிப்பில் கடைசியாக வாய்மை என்ற படம் வெளியானது.
அந்த படத்தை தொடர்ந்து வேறு எந்த படமும் நடிக்கவில்லை. இந்த நிலையில், நடிகர் கவுண்டமணியை நேரில் சந்தித்து நடிகர் சிவகார்த்திகேயன் புகைப்படம் எடுத்துள்ளார். நேரில் சந்தித்து அவரிடம் சிறிது நேரம் கலகலப்பாக பேசியுள்ளார்.
அவருடன் எடுத்த புகைப்படத்தை தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டு “சிறப்பான தருணம், என்றும் நினைவில் இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வைரலாகி வருகிறது.
unknown node