மக்களுடன் மண் தரையில் படுத்து உறங்கிய சிம்பு...!! வைரலாகும் புகைப்படம்..!!

The photo of actor Simbu sleeping on the ground with the people while filming last night has gone viral on social media

நேற்று இரவு படமாக்கும் பொழுது நடிகர் சிம்பு அங்குள்ள மக்களுடன் மண் தரையில் தூங்கிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் சிம்பு ஈஸ்வரன் படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை, கல்யாணி பிரியதர்ஷன் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது மும்மரமாக EVP City ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. விரைவில் படத்திற்கான படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு நேற்று இரவு படமாக்கும் பொழுது நடிகர் சிம்பு அங்குள்ள மக்களுடன் மண் தரையில் தூங்கியுள்ளார். அதற்கான புகைப்படத்தையும் இயக்குனர் வெங்கட் பிரபு தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

unknown node

மேலும் இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். மேலும் படத்தில் நடிகர் எஸ்.ஜே சூர்யா, பிரேம் ஜி, கருணாகரன், சந்திரசேகர், பாரதி ராஜா, மனோஜ் பாரதி ராஜா, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். விரைவில் படத்திற்கான டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.