பூர்ணா :தமிழ் சினிமாவில் முனியாண்டி ,கொடிவீரன், கொடைக்கானல், பகடை, துரோகி, ஆடு புலி, உள்ளிட்ட பல படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை பூர்ணா. தமிழ் மட்டுமின்றி மலையாள சினிமாவிலும் இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். கதைகளைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில், இவருடைய நடிப்பில் ஏற்கனவே உருவாகி இருக்கும் பிசாசு 2 விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய முதல் காதல் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய நடிகை பூர்ணா ” நான் பள்ளிக்கூடம் படிக்கும் போது ஒருவர் மீது எனக்கு காதல் வந்தது.
நான் படித்தது பெண்கள் பள்ளி எதிரில் ஒரு ஆண் பள்ளி இருந்தது. அதில் தான் அவர் படித்து கொண்டு இருந்தார். நான் பள்ளிக்கூடம் முடிந்து வேனில் வீட்டிற்கு செல்வேன். அப்போதிலிருந்து அவர் எனக்காக ரோட்டில் காத்திருந்து என்னை பார்த்துவிட்டு தான் செல்வார். நாங்கள் இருவரும் பேசிக்கொள்ளாமலே கண்களில் காதலித்து கொண்டு இருந்தோம்.
காதலர் தினத்தன்று, சில சாக்லேட்டுகள் மற்றும் ரோஜாக்களை ஒன்றாக கொடுத்தோம். இருப்பினும், இந்த காதல் ஒரு ஒரு வருடம் மட்டுமே நீடித்தது. அதன்பிறகு சில காரணங்களால் நீடிக்கவில்லை” எனவும் நடிகை பூர்ணா தனது பள்ளி பருவ காதல் பற்றிய ரகசியத்தை உளறி கொட்டியுள்ளார்.
unknown nodeshamna kasim marriage [File Image]மேலும், நடிகை பூர்ணா கடந்த 2022ல் ஷானித் ஆசிப் அலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. இப்போது நடிகர் தனது மகனுடன் மிகவும் பிஸியாக இருக்கிறார். இதற்கிடையில், நடிகை தெலுங்கு, மலையாளம், ஆகிய மொழிகளிலும் கலக்கி கொண்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
