ஷாருக்கானிடம் இருந்து ஜவான் மற்றும் பதான் வெற்றிக்குப் பிறகு அவரது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘டன்கி’ திரைப்படத்தை ரசிகர்கள் அவளுடன் காத்திருந்தனர். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
முன்னதாக, ஷாருக்கானின் இரண்டு திரைப்படங்களும் வசூல் ரீதியாக 1,000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. தற்போது, உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில், வெளியான மூன்று நாட்களில் ‘டன்கி’ ரூ.157 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இப்பொது, அதன் 4வது நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
டன்கி ஒரு பான் இந்திய திரைப்படம் இல்லை என்பதால், அதன் பாக்ஸ் ஆபிஸ் வசூல் வேட்டை பின் தங்கி காணப்படுகிறது. அது ஹிந்தி திரைப்பட சாயலில் எடுக்கப்பட்டு இருந்தாலும் இரண்டு நாட்களில் ரூ.100 கோடியை கடந்து வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இல்லாமல், பாக்ஸ் ஆபிஸ் ரேஸில் டன்கி படத்துடன் சலார் திரைப்படம் மோதியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்றே நாட்களில் 402 கோடி! ‘சலார்’ படத்தின் மிரட்டல் வசூல்!
உலக முழுவதும் முதல் நாளில் ரூ.58 கோடியும், இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை ரூ.45.40 கோடியும், மூன்றாம் நாளான சனிக்கிழமை ரூ.53.82 கோடியும் ஈட்டியது. இப்போது, 4வது நாளான நேற்று பாக்ஸ் ஆபிஸ் வசூலின் கணக்கின்படி, ரூ.53.91க்கு மேல் என மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்தத்தில் இப்படம் ரூ.211.13 கோடி வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
unknown nodeமேலும், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை தினமான இன்று இன்று வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
