கே.ஜி.எப்-2 படத்துடன் மோதும் ருத்ரன்..! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

ராகவா லாரன்ஸ் ரசிகர்களுக்கு ருத்ரன் பட குறித்த மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.

ராகவா லாரன்ஸ் ரசிகர்களுக்கு ருத்ரன் பட குறித்த மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.

இயக்குனரும், நடன இயக்குனர், நடிகருமான ராகவா லாரன்ஸ் அடுத்ததாக ருத்ரன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். பைவ் ஸ்டார் கதிரேசன் அவரே இயக்கி அவரே படத்தை தயாரித்துள்ளார்.  படத்திற்கு இசையமைப்பளார் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதனையடுத்து, தற்போது ருத்ரன் படத்தின் புதிய அப்டேட் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் பைவ் ஸ்டார் நேற்று அறிவித்திருந்தது.

அதன்படி, தற்போது படத்திற்கான ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ருத்ரன் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14 – ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கேஜிஎப் 2 அதே தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.