நெப்போலியன் சார்பில் ரூ 25 லட்சம் கொரோனா நிதி..!!

The chief has been given a check for Rs 25 lakh corona fund on behalf of actor Napoleon.

முதல்வரிடம் நடிகர் நெப்போலியன் சார்பில், ரூ 25 லட்சம் கொரோனா நிதிக்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக,பல மாநிலங்களில் இரவு நேர மற்றும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,கொரோனா தடுப்பு பணிகளுக்காக மக்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் தங்களால் முடிந்த நிதியுதவியை அளித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் நெப்போலியன் சார்பில் ஜீவன் டெக்னாலஜி இந்தியா பிரைவேட் லிமிட்டட் மற்றும் ஜீவன் அறக்கட்டளை சார்பாக  சுரேஷ், அசோக், திருமதி, வசந்தி பாபு, திரு. சீத்தாராமன் கொரோனா நிவாரண பணிக்காக முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து 25 லட்சம் ரூபாய்கான காசோலையை வழங்கியுள்ளனர்.