காவல்துறை கட்டுப்பாட்டில் பிரபல இயக்குனர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பிரபல இயக்குனரான ராம்கோபால் வர்மா பல தெலுங்கு படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், ராம்கோபால் வர்மா தான் இயக்கிய 'லட்சுமியின் என்.டி.ஆர்' என்ற படத்தை வரும் மே

பிரபல இயக்குனரான ராம்கோபால் வர்மா பல தெலுங்கு படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், ராம்கோபால் வர்மா தான் இயக்கிய ‘லட்சுமியின் என்.டி.ஆர்’ என்ற படத்தை வரும் மே 1ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தார்.

இதனையடுத்து, இந்த படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று விஜயவாடாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இயக்குனர் ராம்கோபால் வர்மா, ஐதராபாத்தில் இருந்து விஜயவாடாவுக்கு செல்ல ஆயத்தமாகியுள்ளார்.

இந்நிலையில், விஜயவாடாவிற்குள் நுழையும் முன்பே ஆந்திர போலீசார், அவரை கஸ்டடியில் எடுத்து, மீண்டும் ஐதராபாத் செல்ல வலியுறுத்தியுள்ளனர். இதனையடுத்தது, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பு நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவரது ட்வீட்டர் பக்கத்தில், “ஆந்திராவில் ஜனநாயகம் இல்லை. உண்மையை சொல்ல முயற்சித்த என்னை போலீஸ் கஸ்டடியில் எடுத்துள்ளனர். என்னுடைய சமூக வலைத்தள பக்கங்களும் தடுக்கப்பட்டுள்ளதால் என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை.” என தெரிவித்துள்ளார்.

unknown node
காவல்துறை கட்டுப்பாட்டில் பிரபல இயக்குனர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!