உணவின்றி உடைந்த வீட்டில் வசித்து வரும் 'பரியேறும் பெருமாள்' பட நடிகர் .! திரையுலகினர் உதவ முன் வருவார்களா.?

The District Collector has come forward to help Thangaraj, who starred in the film Pariyerum Perumal, continue to live in a broken house without food.

பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த தங்கராசு உணவின்றி உடைந்த வீட்டில் வசித்து வருவதை தொடர்ந்து அவருக்கு உதவ மாவட்ட ஆட்சியர் முன் வந்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பரியேறும் பெருமாள்.வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்ற இந்த திரைப்படத்தில் கதிர் மற்றும் கயல் ஆனந்தி தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டையும் பெற்றனர் .

இந்த நிலையில் பரியேறும் பெருமாள் படத்தில் கதிருக்கு தந்தையாக நடித்தவர் தங்கராசு . நாட்டுப்புற கலைஞரும் ,நடிகருமான இவர் நெல்லையில் வசித்து வரும் நிலையில் சமீபத்தில் பெய்த மழையால் இவரது வீடு சேதமடைந்துள்ளது . அதனுடன் உணவின்றி வறுமையில் இருந்து வரும் இவருக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உதவ முன் வந்துள்ளார் .விஷ்ணு அவரது வீட்டை சீரமைத்துத் தருவதாக கூறியுள்ளார்.இதே போன்று தங்கராசுடன் நடித்த நடிகர், நடிகைகள் உட்பட திரையுலக பிரபலங்கள் அவரது வறுமையை நீக்க உதவ முன் வருவார்களா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.