வார்த்தைகள் இல்லை இந்த வள்ளலை பாராட்ட! விஜயகாந்த் குறித்து இயக்குனர் சேரன் ட்வீட்!

Default Image

இயக்குனர் சேரன் அவர்கள், தேமுதிக தலைவர் விஜயகாந்தை பாராட்டி வெளியிட்டுள்ள பதிவு.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், இதனை கட்டுப்படுத்துவதற்கான தீவிர முயற்சியில் இந்திய அரசு இறங்கியுள்ளது. இதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால் மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்ட நிலையில், மக்களை காக்கும் பணியில் காவல்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் தீவிரத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.

இந்தப் பணியில் ஈடுபடும் போது இவர்களில் சிலர் தங்கள் உயிரையே தியாகம் செய்ய நேரிடுகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பும், தாக்குதலும் எழுந்தது.

இந்த நிலையில் நடிகர் விஜயகாந்த் கொரோனா வைரஸால், உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தால் ஆண்டாள் அழகர் கல்லூரியில் அடக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து, இயக்குனர் சேரன் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘வார்த்தைகள் இல்லை.. இந்த வள்ளலை பாராட்ட. வாழவேண்டியரும் வாழவைக்க வேண்டியவரும் நீங்கள்தான் கேப்டன். உங்க பெரிய மனசுல உங்க உயரத்தை இன்னும் உயர்த்திக்கொண்டீர்கள். கொரோனாவில் பலியாகும் உயிர்க்கு அடைக்கலம் தந்த இலக்கியங்கள் காணாத வள்ளல்.’ என பாராட்டி பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்