தமிழ் சினிமாவில் மிகவும் அதிகமாக கிசுகிசுக்களுக்கு ஆளாகும் பிரபலங்கள் என்றால் சட்டென நமக்கு நினைவில் வருவது லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும் விக்னேஷ்சிவனும் தான்.மேலும் இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் முறையில் வசிப்பதாகவும் பரபரப்பான செய்திகள் வெளியாகி கோலிவுட்டில் கிசு கிசுக்கப்பட்டது.
unknown nodeஅதுமட்டின்றி சமீபத்தில் விக்னேஷ் சிவனின் குடும்பத்தினருடன் நயன்தாரா தமிழ் புத்தாண்டை கொண்டாடிய புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து “காதல், குடும்பம், அன்பு என வாழ்க்கை நல்ல விஷயங்களால் நிறைந்துள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.ஆனால், விக்னேஷ் சிவனிடம் திருமணப்பேச்சு எடுத்தால் உடனே மழுப்பலான பதில் தான் கிடைக்கிறது. இதற்கு முக்கிய காரணமே நயன்தாரா தான்.
unknown nodeஇவர் 100 படங்களில் நடித்து முடித்த பின்னர் தான் திருமணம் பற்றி முடிவெடுப்பேன் என்பதில் நயன்தாரா உறுதியாக இருகிறார். ஆனால் விக்னேஷ் சிவன் தாயார் திருமணம் செய்துக்கொள்ள சொல்லி கொடுக்கும் அழுத்தத்தாலும் , நயனுக்கும் வயதாகி கொண்டே போகிறது என்பதாலும் இந்த திருமணம் விரைவில் நடக்கவிருக்கிறதாம்.
unknown nodeஎனவே, இந்த ஆண்டு இறுதியில் நிச்சயதார்த்தமும் அடுத்த வருடத்தில் திருமணம் செய்துகொள்ளலாம் என முடிவெடுத்துள்ளாராம் நயன்தாரா. இதனால் விக்னேஷ் சிவன் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறாராம். இந்த தகவல் தற்போது கோலிவுட்டில் ஹாட் செய்தியாக வைரலாகி வருகிறது. இதனால் நயன்தராவின் ரசிகர்கள் கவலையிலும் மகிழ்ச்சியிலும் காணப்படுகின்றனர்.
DINASUVADU.