அடுத்த ஆண்டு வெளியாகும் "பொன்னியின் செல்வன் " பாகம் 1 ..! அதிகார்வப்பூர்வ அறிவிப்பு.!

மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்ட பொருட்செலவில் உருவாகி வரும்  பொன்னியின் செல்வன் பாகம் 1 அடுத்தாண்டு வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்ட பொருட்செலவில் உருவாகி வரும்  பொன்னியின் செல்வன் பாகம் 1 அடுத்தாண்டு வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள்.

இந்த படத்தின் படப்பிடிப்பானது கடந்தாண்டு தாய்லாந்தில் வைத்து தொடங்கப்பட்டது. அதன் பின் கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தப்பட்ட படத்தின் படப்பிடிப்பை ஜனவரியில் இருந்து ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து மீண்டும் தொடங்கப்பட்டது.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு 70 % விகிதம் முடிவைத்துள்ள நிலையில், கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக மீண்டும் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து படத்திற்கான படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த திரைப்படத்தில் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. இதில் பொன்னியின் செல்வன் பாகம் 1 அடுத்தாண்டு வெளியாகிறது என லைகா நிறுவனம் தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் ஆவலுடன் படத்திற்காக காத்துள்ளனர்.

unknown node

இந்தப் படத்தை லைகா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். ஒளிபதிவாளர் ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.