சிவகார்த்திக்கேயனின் புதிய படத்தில் விஸ்வரூபம் எடுக்கும் புதிய சர்ச்சை….!!!

Default Image
  • நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.
  • ஹீரோ என்ற தலைப்பை சிவரகார்த்திக்கேயன் படத்திற்கு வைத்தது குறித்து எதிர்ப்பு தெரிவித்த ஆனந்த்.

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் எப்போதுமே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், தற்போது உருவாக்கி வரும் புதிய படம் நேற்று பூஜையுடன் தொடங்கியது. இந்நிலையில், அந்த படத்தின் டைட்டில் ஹீரோ என்று படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், ஹீரோ தலைப்பு எனக்கு சொந்தமானது. அதை எப்படி சிவகார்த்திகேயன் படத்திற்கு வைக்கலாம் என்று ஆனந்த் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இந்த தலைப்பினை வர வைப்பதற்கு ஆனந்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், என் படத்திற்கு ஹீரோ என்ற தலைப்பை தேர்வு செய்து ஓராண்டுக்கு முன்பே தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவு செய்தோம். அப்படி இருக்கும்போது சிவகார்த்திகேயன் படத்திற்கு ஹீரோ என்று தலைப்பு வைத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்