கடந்த 2003-ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான பிதாமகன் படத்தில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் பிரபலமானவர் நடிகை சங்கீதா. இதனை தொடர்ந்து கடந்த 2009-ஆம் ஆண்டு பாடகர் கிரிஷ்ஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்தை தொடர்ந்தும் சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் மட்டும் சங்கீதா நடித்து வருகிறார்.
unknown nodesangeetha pithamagan Image Source: google
இதற்கிடையில், சமீபத்திய ஒரு பேட்டியில் தனது அம்மா தப்பானவர் என சோகத்துடன் பரபரப்பான தகவலை பகிர்ந்துள்ளார். இது குறித்து சோகத்துடன் பேசிய அவர் ” குடும்ப சூழல் காரணமாக 14 வயது இருக்கும்போதே தன்னை நடிக்கஅனுப்பிவைத்துவிட்டார்கள். நான் கஷ்டப்பட்டு நடித்து சேமித்து வைத்த பணத்தை ஊதாரித்தனமாக என்னுடைய அம்மா செலவு செய்வார்.
unknown nodesangeetha pithamagan Image Source: google
இதனால், அதற்கு சில கட்டுப்பாடுகள் கொண்டு வந்தேன். என்னுடைய அண்ணன்கள் குடிகாரர்கள். இப்போ வரைக்கும் அவர்களுடைய செலவை நான்தான் பார்த்துக் கொள்கிறேன். ஆனால் அதனை குறைத்துக் கொண்டேன்.
இதையும் படியுங்களேன்-நீ பேர்ல தான் வில்லன்.. ஆனால்.? அஜித்திற்கு எதிரான வசனம்.! அதிரடியாய் நிராகரித்த தளபதி விஜய்.!
unknown nodesangeetha pithamagan Image Source: google
பொதுவாக பணம் எடுக்கும் ஏடிஎம் மெஷினில் பணம் வரவில்லை என்றால் நாம் எல்லாரும் கோபத்தில் அதனை தட்டி பார்ப்போம் அல்லவா, அதைப்போல இப்போது என்னிடமிருந்து அவர்களுக்கு பணம் போகவில்லை என்பதால் என் மீது குற்றம் கூறுகிறார்கள். என் வாழ்க்கையை பொறுத்தவரை என் அம்மா தப்பானவர் என கண்ணீருடன் பேசியுள்ளார் நடிகை சங்கீதா.