மகள் பவதாரிணியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய இளையராஜா!

Ilaiyaraaja

பாடகியும் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளுமான பவதாரிணி கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், ஜனவரி 25-ஆம் தேதி காலமானார். புற்றுநோய்க்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில், இலங்ககையில் ஜனவரி 25-ஆம் தேதி காலமானார் . அவருடைய உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.

சென்னைக்கு கொண்டுவரப்பட்ட அவருடைய உடல் சென்னை தி.நகரில் உள்ள இளையராஜா வீட்டில் நேற்று வைக்கப்பட்டு இருந்தது. கார்த்தி, விஷால், வெங்கட் பிரபு, குட்டி பத்மினி, ராதிகா, விஜய் ஆண்டனி, சிம்பு, மோகன் ராஜா, மனோஜ் பாரதிராஜா, ராமராஜன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் எல் முருகன் உள்ளிட்ட பலரும் நேரில் சென்று இரங்கலை தெரிவித்தனர்.

தங்கை பவதாரிணியின் இழப்பால் மிகுந்த வருத்தம்: நேரில் அஞ்சலி செலுத்திய அமைச்சர் உதயநிதி

பிறகு, பிரத்யேக ஆம்புலன்ஸ் மூலம் நேற்று இரவு அவருடைய உடல் தேனிக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்,  இன்று காலை 11 மணி அளவில் அவரது உடல் தேனி வந்தது.பவதாரணியின் உடல், தேனியில் இருக்கும் இளையராஜாவின் பண்ணை வீட்டில் அவரது தாயார் சின்னதாய் மற்றும் அவரது மனைவி ஜீவா ஆகியோரது உடல் அருகே இன்று நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

தற்போது அவருடைய உடலுக்கு குடும்பத்தினர் தங்களுடைய அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள். இன்னும் சில நேரங்களில் அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ள நிலையில், இளையராஜா தனது மகளின் உடலை பார்த்து சற்று வேதனையுடன் அஞ்சலி செலுத்தினார். அவருடன் இயக்குனர் பாரதி ராஜாவும் கண்ணீருடன் தனது அஞ்சலியை செலுத்தினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்