Metoo குறித்து மிரளவைக்கும் கருத்துக்களை கூறிய ரஜினிகாந்த்…!!!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக ரஜினிகாந்த் விளங்குகிறார். இந்நிலையில் இவர் படப்பிடிப்பு முடிந்து, திரும்பிய போது இவரிடம் சில கேள்விகளை முன் வைத்துள்ளார்கள் பத்திரிக்கையாளர்கள்.
இந்நிலையில் சபரிமலை பிரச்சனையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்க்கு அவர் உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாகவும், அந்த நேரத்தில் ஐதீகத்தை பின்பற்ற வேண்டும் என கூறியுள்ளார்.
இதனையடுத்து இவரிடம் மீடூ குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்க்கு அவர் ‘ பெண்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும். ஆனால் பெண்கள் அதை தவறான முறையில் பயன்படுத்த கூடாது ‘ என்று கூறியுள்ளார்.