சரிகமப சீசன் 4 டைட்டில் வென்ற மகிழன்! பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

"சரிகமப சீசன் 4" நிகழ்ச்சியில் டைட்டில் வென்ற மகிழனுக்கு ரூ. 10 லட்சம் பரிசாக வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

SaregamapaSeason4 Title Winner

சென்னை : ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வந்த “சரிகமப சீசன் 4” நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் மகிழன், ஸ்வேதா, வீரபாண்டி, சரண்குமார், ஆகியோர் பங்கேற்றனர். இதில், யார் டைட்டிலை வெல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்தது.

இறுதிப்போட்டியில் பங்கேற்ற இந்த போட்டியாளர்களும் தங்களால் முடிந்த அளவுக்கு நல்ல பாடல்களைப் பாடி நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜை கவர்ந்திழுத்தனர். நிகழ்ச்சியில் பாடல் பாடியவர்களை பார்த்து மெய் சிலிர்த்து ஹாரிஸ் ஜெயராஜ் தன்னுடைய பாராட்டுகளையும் தெரிவித்தார்.

அனைவரும் சிறப்பாகப் பாடினாலும் ஒருவருக்கு தான் நிகழ்ச்சியின் டைட்டிலை கொடுக்க முடியும். எனவே, அந்த டைட்டில் யாருக்குச் செல்லப்போகிறது என நிகழ்ச்சியிலிருந்த ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் நம்பர் எண்ணிக்கொண்டு இருந்த நிலையில், மகிழன் தான் டைட்டில் வின்னர் என அவருடைய கைகளைத் தூக்கி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் அறிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வென்ற மகிழனுக்கு கிடைத்த பரிசுத் தொகை குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. அதன்படி, நிகழ்ச்சியில் டைட்டில் வென்ற அவருக்கு ரூ. 10 லட்சம் பரிசாக வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், மகிழனுக்கு டைட்டில் கிடைத்த நிலையில், இரண்டாவது பரிசு ஸ்வேதாவுக்கு கிடைத்தது.

அதைப்போல, மூன்றாவது பரிசு வீரபாண்டிக்கு கிடைத்தது. அதைப்போல, சரண்குமாருக்கு மக்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட வெற்றியாளர் என்கிற ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் டைட்டில் வென்ற மகிழனுக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்