அந்த மாதிரி நடிக்க ஆசை இருக்கு! மனம் திறந்த கீர்த்தி சுரேஷ்!

keerthy suresh

கீர்த்தி சுரேஷ் : சவாலான கதாபாத்திரங்களை தேர்வு செய்ய ஆசை இருப்பதாக நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷின் மார்க்கெட் ஆரம்ப காலத்தை போல இல்லை என்றாலும் கூட அவருக்கு பட வாய்ப்புகள் ஒரு பக்கம் தொடர்ச்சியாக குவிந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில், தமிழில் ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா, கண்ணிவெடி, ஆகிய படங்களையும், ஹிந்தியில்  பேபி ஜான் படத்தையும் கைவசம் வைத்துள்ளார்.

ஒவ்வொரு படமும் ஒவ்வொரு வித்தியாசமான கதையம்சத்தை கொண்ட படமாக இருக்கும் என தெரிகிறது. இந்த சூழலில், தனக்கு அடுத்ததாக நடிக்க ஆசை கொண்ட கதாபாத்திரங்கள் பற்றியும் மகாநடி படம் பற்றியும் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கீர்த்தி சுரேஷ் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” ‘மகாநடி’ படங்களில் நான் நடித்த கதாபாத்திரம் போல், அதிக பொறுப்புடன் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதில் தான் நான் அதிகமாக ஆர்வம் காட்டிகொண்டு வருகிறேன்.

பொதுவாக நாம் படங்களில் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களில் சில அந்த நடிகர், நடிகையின் வாழ்க்கையில், தொழில்ரீதியாக அவர்களுக்கு இருக்கக்கூடிய கோணத்தை அப்படியே மாற்றிவிடும். அப்படியான படங்களில் நாம் நடித்தோம் என்றால், இனிமேல் தொடர்ச்சியாகவே நமக்கு அப்படியான கதாபாத்திரங்கள் தான் வரும்.

அதுபோன்ற கேரக்டர்கள் அவர்களை வழிநடத்திச் செல்லும். வித்தியாசமான, மிகவும் நல்ல கேரக்டர்களுக்கு இருக்கும் பலம் இதுதான். ‘மகாநடி’ படத்தில் நான் நடித்து முடித்த பிறகு அந்தக் கேரக்டர் எனக்குள் ஏற்படுத்தியிருந்த பாதிப்பை, இத்தனை வருடங்களான பிறகும் கூட என்னால் மறக்க முடியவில்லை. தொடர்ச்சியாகவே அதுபோன்ற கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. தற்போது சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க நான் முன்னுரிமை தருகிறேன்’ எனவும் கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்