ஜெயம் ரவியின் விவாகரத்து முடிவு : பேச வாய்ப்பு கேட்டு ஆர்த்தி உருக்கம்!!

எனது அமைதி பலவீனம் அல்ல எனவும், உண்மைக்கு மாறாக என்னை தவறாக சித்தரிப்போருக்கு பதிலளிக்க விரும்பவில்லை என இன்ஸ்டாகிராமில் ஆர்த்தி ஒன்றை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

aarthi and jayam ravi

சென்னை : ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்தது தான் பெரிய சர்ச்சையாகச் சமீபத்தில் வெடித்தது. இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில், ஜெயம் ரவி தன்னுடைய அனுமதி கூட இல்லாமல் இந்த விஷயத்தை அறிவித்ததாகக் குற்றம்சாட்ட ஜெயம் ரவியும், தன்னுடைய மனதிலிருந்த வேதனை விஷயங்களையும் வெளிப்படையாகச் சொன்னார்.

Read More- “வாட்ஸ்அப் கூட யூஸ் பண்ண முடியல”…ஆர்த்தியின் கொடுமைகள்? கண்கலங்கிய ஜெயம் ரவி!!

அதாவது, தன்னுடைய மனைவி மற்றும் அவருடைய குடும்பத்தினர் தன்னை மோசமாக நடத்தியதாகவும், வீட்டு பணியாளர்களுக்கு கொடுக்கும் மரியாதை கூட தனக்கு கொடுக்கவில்லை எனவும், தன்னை  அவர்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும், இதனால் தனக்கு விவாகரத்து முடிவு தான் சரியானது என இந்த முடிவை எடுத்துள்ளதாக வெளிப்படையாகவே தெரிவித்து இருந்தார்.

இந்த சூழலில், அவருடைய மனைவி ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனிப்பட்ட முறையில் எனது கணவருடன் பேச விரும்புகிறேன் எனவும், இதுவரை தன்னுடைய கோரிக்கை ஏற்கப்படவில்லை என அறிக்கை ஒன்றை உருக்கமாக வெளியிட்டுள்ளார்.

ஜெயம் ரவி பேசியதை வைத்து ஆர்த்தி மீது எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்துள்ள சூழலில், அவர் இதனைப் பற்றிப் பேசாமல் இருந்த காரணத்தால் இதெல்லாம் உண்மை தான் எனவும் கூடுதலாகவே அவர் மீது விமர்சனங்கள் கொட்டப்பட்டது.

அதற்குப் பதில் அளிக்கும் விதமாக எனது மவுனம், நான் பலவீனம் அல்லது குற்ற உணர்ச்சியில் இருப்பதாகப் பொருள்படாது. எனவும் உண்மையை மறைத்து என்னைத் தவறாகச் சித்தரிப்பவர்களுக்குப் பதிலளிக்க,  விரும்பாமல் கண்ணியமாக இருக்கவே விரும்புகிறேன்” எனவும் அறிக்கை மூலம் பதில் அளித்திருக்கிறார்.

மேலும், ஜெயம் ரவியுடன் பேசக் காத்திருப்பதாகவும், அவர் மீது வைத்துள்ள அன்பை வெளிப்படுத்தும் விதமாகவும் அறிக்கையில் ஆர்த்தி பேசியுள்ளார். அதாவது தனிப்பட்ட முறையில் ஜெயம் ரவியுடன் பேசுவதற்கு வாய்ப்பு கோரியும் எனக்கு இன்னும் கிடைக்கவில்லை. அதற்காகக் காத்திருக்கிறேன் என்பது போலவும் அறிக்கையில் உருக்கமாக ஆர்த்தி பேசியிருக்கிறார்.

திருமணத்தைப் புனிதமாகக் கருதுவதால், இது தொடர்பாகப் பொதுவெளியில் விவாதிக்க விரும்பவில்லை ” எனவும் ஆர்த்தி கூறியுள்ளார். ஆர்த்தி உருக்கமாகப் பேசியதையாவது பார்த்துவிட்டு ஜெயம் ரவி அவருடன் பேசுவாரா என்கிற ஆசை தான் ரசிகர்களுடைய கருத்தாகவும் இருக்கிறது. இந்த விஷயத்திற்கு ஜெயம் ரவி என்ன சொல்லப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

 

View this post on Instagram

 

A post shared by Aarti Ravi (@aarti.ravi)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்