டிஸ்கவரி சேனலில் மிகவும் பிரபலமான டிவி ஷோ ‘ இன் டூ தி வைல்ட்’. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பியர் கிறில்ஸ் உடன் பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமார் மற்றும் பாலிவுட் நடிகை ஹியூமா குரோஷி இன்ஸ்டாகிராமில் கலந்துரையாடினர்.
பியர் கிறில்ஸ் உடன் அக்ஷய் குமார் இன் டூ தி வைல்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தார். அந்த நிகழ்வை பற்ற இன்ஸ்டாகிராமில் மூவரும் கலந்துரையாடினர்.
அப்போது, பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் எப்படி யானை கழிவில் இருந்து தயாரிக்கப்பட்ட டீயை குடித்தார் என ஹியூமா குரோஷி கேட்டார். அதற்கு அக்ஷ்ய் குமார், சில ஆயுர்வேத காரணங்களுக்காக பசுமாட்டு சிறுநீரை குடித்து வந்ததன் காரணமாக இந்த சுவை பற்றி கவலை படவில்லை என அவர் வெளிப்படுத்தியுள்ளார். இந்த தகவலால் ஹியூமா குரோஷி சற்று அதிர்ச்சியடைந்தார்.
unknown nodeபியர் கிரில்ஸுடன் அக்ஷய் குமார் கலந்துகொண்ட இன் டூ தி வைல்ட் எபிசோட் இம்மாதம் (செப்டம்பர்) 11 ஆம் தேதி இரவு 8 மணிக்கு டிஸ்கவர்+ யிலும், செப்டம்பர் 14 ஆம் தேதி இரவு 8 மணிக்கு டிஸ்கவர் சேனலிலும்ஒளிபரப்பாக உள்ளது.
unknown node