எனக்கு பாக்ஸ் ஆபிஸ் முக்கியமில்லை.! உங்களுடன் இருப்பது தான் மகிழ்ச்சி.! ராஜமௌலி நெகிழ்ச்சி.!

Default Image

இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் அலியா பாட், அஜய்தேவ் கான், ஸ்ரேயா சரண், மேலும் சில பல ஹாலிவுட் பிரபலங்களின் நடிப்பில் வெளியான பிரமாண்ட திரைப்படம் ஆர்ஆர்ஆர். இந்த திரைப்படம் கடந்த 25-ஆம் தேதி உலகம் முழுவதும் அணைத்து மொழிகளும் வெளியானது.

வெளியாகி இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் 1000கோடி வசூல் செய்தது. அடுத்த வாரம் பீஸ்ட் மற்றும் கேஜிஎப் படம் வெளியாகும் வரை ஆர்ஆர்ஆர் படத்திற்கு வரவேற்பு குறையாயது.

 

இந்த நிலையில் படத்தின் வெற்றி விழா நேற்று நடைபெற்றது. விழாவில், ராஜமௌலி ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் அலியா பாட், அஜய்தேவ் கான் கலந்துகொண்டார்கள். அப்போது ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் உள்ளிட்டோர் இயக்குனர் ராஜமௌலியிடம் ஒரு கேள்வி கேட்டார்கள்.

ஆர்ஆர்ஆர் படத்தின் இரண்டாம் பாகம் வருமா..? என கேட்டார்கள் அதற்கு பதிலளித்த ராஜமௌலி, ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பேன் ஆனால் அதற்கு சில காலம் எனக்கு தேவைப்படுகிறது. அதுவரை பொறுத்திருங்கள்.

இரண்டாம் பாகத்தை இயக்கினால் பாக்ஸ் ஆபீஸில் வெற்றிபெறும் என்பதற்கு மட்டுமல்லாமல் என் தம்பிகளான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் உடன் மீண்டும் அதிக நேரம் செலவிடலாம் என நெகிழ்ச்சியுடன் ராஜமௌலி கூறியுள்ளார். ராஜமௌலி அடுத்தாக மகேஷ் பாபுவை வைத்து ஒரு புதிய திரைப்படம் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 06 03 2025
ChandrababuNaidu
IND VS NZ CT 2025
mookuthi amman 2
sunil gavaskar rohit sharma
Actor Abhinay
gold price