நள்ளிரவில் அந்த இடத்தில் படப்பிடிப்பு! பயந்து நடுங்கிய ஹன்ஷிகா!

hansika

சினிமா துறையில், இருக்கும் பல நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடித்து கொண்டு பிஸியாக இருக்கிறார்கள். அவர்களில் நடிகை ஹன்சிகாவும் ஒருவர். இவர் தமிழ் மொழி மட்டுமின்றி பல மொழிகளிலும் நடித்து கலக்கி கொண்டு இருக்கிறார். சமீபகாலமாக இவர் நடித்த படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக திரைக்கு வந்து கொண்டு இருக்கிறது.

READ MORE-நம்பி ஏமாந்துட்டேன்! ‘வாழ்க்கை போச்சு’… நடிகை கிரண் வேதனை!

அந்த வகையில், ஹன்சிகாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான கார்டியன் திகில் படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. படத்தில் ஹன்சிகா அழகான இளம் பெண்ணாகவும் பேயாகவும் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். பிலிம் ஒர்க்ஸ் பேனரில் விஜய்சந்தர் தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குனர் இரட்டையரான சபரி மற்றும் குருசரவணன் இயக்கியுள்ளனர்.

READ MORE- என்னோட சந்தோஷம் எல்லாம் போச்சு! கதறிய சிம்ரன்? வெளியான சீக்ரெட்! 

ஷ்யாம் சிஎஸ் இசையமைக்க, கே ஏ சக்திவேல் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் வெள்ளிக்கிழமை (மார்ச் 8) திரையரங்குகளில் வெளியானது. அரண்மனை 1 மற்றும் 2 படங்களுக்கு பிறகு ஹன்சிகா நடிக்கும் ஹாரர் படம் இது என்றே கூறலாம். இந்த நிலையில், இந்த கார்டியன் படத்தில் நடித்த தனது அனுபவம் குறித்து பேசிய ஹன்சிகா ” கார்டியன் படத்தில் நடித்தது எனக்கு புதிய அனுபவம் கொடுத்தது என்று கூறுவேன். இந்த திரைப்படத்தில் பேய் கதாபாத்திரத்தில் நடித்தது சற்று சவாலாக இருந்தது.

READ MORE – என்னது விவகாரத்தா? சும்மா குண்டை தூக்கி போடாதீங்க…முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா!

இந்த படத்திற்கு நான் சரியானவளாக இருக்கிறேன் என்று நான் நினைக்கிறேன். இப்படத்தின் சில காட்சிகள் நள்ளிரவு 12 மணிக்கு கல்லறை இருக்கும் இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.  தலைகீழாக தொங்கிக்கொண்டு பேயாக அலறும் காட்சிகளில் நடித்தது எனக்கு சற்று சவாலாக அமைந்தது.  திருமணத்திற்குப் பிறகு நடிப்பில் எந்த வித்தியாசமும் இல்லை அம்மாவும். கணவரும் மிகவும் உறுதுணையாக இருக்கிறார்” எனவும் ஹன்ஷிகா தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்