சிங்கம் படத்தின் கதையை முதலில் கூறியது தளபதி விஜய்யிடம் தான் என்று கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா .இவரது திரைப்பயண வாழ்க்கையில் மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் சிங்கம் .ஹரி இயக்கிய இப்படத்தில் சூர்யா ஒரு நேர்மறையான போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார் .அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சிங்கம் 2 , சிங்கம் 3 ஆகிய படங்களும் உருவாகி வெற்றியை பெற்றது.
இந்த நிலையில் முதன் முறையாக சிங்கம் படத்தில் நடிக்க ஹரி தேர்வு செய்தது தளபதி விஜய்யிடம் தானாம் . சிங்கம் படத்தின் கதையை விஜய்யிடம் கூறிய பின் அவர் வேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது