சென்னையில் நடிகை வீட்டில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு.! பணியாளர் தலைமறைவு.!

Default Image

தமிழில், என்னை அறிந்தால், நிமிர்ந்து நில் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த நடிகை பார்வதி நாயர் தற்போது ஹிந்தியிலும் கலக்கி கொண்டிருக்கிறார். இதற்கிடையில். சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் வசித்து வரும் நடிகை பார்வதி நாயரின் வீட்டில் திருட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அவரது வீட்டில் உள்ள ரூ.6 லட்சம் மற்றும் ரூ.50 ஆயிரம் மதிப்புடைய மடிக்கணினி, ரூ.3 லட்சம் மதிப்பிலான 2 கை கடிகாரங்கள், செல்போன் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தனது வீட்டின் பணியாளர் மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகை பார்வதி நாயர் புகார் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரை ஏற்றுக்கொண்ட நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். உடனடியாக தலைமறைவான அந்த பணியாளரை கண்டுபிடித்து கொள்ளயடித்த பொருட்களை போலீசார் கைப்பற்றிவிடுவார்கள் என கூறபடுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்