ஆயிரத்தில் ஒருவன்-2விற்கு நான் தான் மியூசிக்.! துண்டு போட்டு சீட் பிடித்த ஜீவி.!

Default Image

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010 – ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். இந்த படத்தில் கார்த்தி, ரீமா சென், பார்த்திபன், ஆண்ட்ரியா ஜெரமையா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவர். இத்திரைப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளராக ராம்ஜி பணியாற்றியுள்ளார்.

இந்த திரைப்படம் வெளியான ஆண்டில் மக்களிடம் சரியாக சேரவில்லை என்றே கூறலாம். அடுத்தாக ரீ ரிலீஸ் செய்தவுடன் அனைவரும் வியந்து செல்வராகவன் மற்றும் படக்குழுவை பாராட்டினார்கள் என்றே கூறலாம்.

முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாவது பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், இயக்குனர் செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் 2 2024-ஆம் ஆண்டு தொடங்கும் எனவும் அதில் நடிகர் தனுஷ் நடிப்பார் எனவும் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஆயிரத்தில் ஒருவன் 2 விற்கு இசையமைப்பாளர் நீங்களா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். ஆயிரத்தில் ஒருவன் 2 குறித்து அவர் கூறியது ” ஆயிரத்தில் ஒருவன் 2 படத்திற்கு என்னை அழைத்தாள் கண்டிப்பாக இசையமைப்பேன்…என்னை கூப்டற மாதிரி தான் சொல்லுறாங்கள்..அந்த படம் தொடங்கி..தயாரிப்பாளர் சரியாக அமைந்து படத்தை கையெழுத்துசெய்வது வரை நான் கிடையாது..கண்டிப்பாக நான் படத்தில் இருக்க 90% வாய்ப்பு இருக்கு” என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்