யாரு தான் வில்லன்? ரஜினியின் 170வது படத்தில் இணைந்த பகத் பாசில் – ராணா டகுபதி!!

Fahadh Faasil 'MAAMANNAN

ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய 170-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது, படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர்கள் நேற்று முன் தினத்தில் இருந்து படத்தில் நடிக்க போகும் நடிகர்- நடிகைகள் பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.  நேற்றைய தினம் நடிகைகள் யாரெல்லாம் என்பது குறித்து வெளியிட்ட படக்குழு இன்று நடிகர்கள் யாரெல்லாம் என்று அறிவித்து வருகின்றனர். நடிகைகள் லிஸ்டில் துஷாரா விஜயன், ரித்திகா சிங் மற்றும் மஞ்சு வாரியர் ஆகியோர் உள்ளனர்.

அந்த வகையில், இன்று காலை தெலுங்கு நடிகர் ராணா டகுபதி தலைவர் 170வது படத்தில்  இணைந்துள்ளதாக தெரிவித்தனர். தற்பொழுது, மலையாள நடிகர் பகத் பாசில் நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ராணா டகுபதி பாகுபலி படத்தில் வில்லனாக நடித்திருப்பார், பகத் பாசில் மாமன்னன் படத்தில் வில்லனாக மிரட்டியிருப்பார். இந்த நிலையில், இந்த படத்தில் இவர்கள் இருவரில் யார் தான் வில்லன் என்று கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே வெளியான தகவலின்படி, பகத் பாசில் வில்லனாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், இன்று படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ள நிலையில், அதில் கலந்து கொள்வதற்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று செல்லும் போது சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய ரஜினிகாந்த், படம் கருத்துக்கள் நிறைந்த பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும். படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக நான் செல்கிறேன். படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறினார்.

தலைவர் 170 படத்தை தொடர்ந்து, ரஜினிகாந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘தலைவர் 171’ படத்தில் நடிக்கவுள்ளார். 2024 பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் லால் சலாம் படத்தில் கேமியோ தோற்றத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்