“போட்டி இருக்கனும்..நான் இப்படி தான்”…மணிமேகலைக்கு பதில் சொன்ன பிரியங்கா!!

தொகுப்பாளர் வேலையில் போட்டி இருக்கவேண்டும்..அது ஜாலியான போட்டியாக இருக்கவேண்டும் என பிரியங்கா தெரிவித்துள்ளார்.

manimegalai vijay tv priyanka

சென்னை : ஒரு குடும்பத்தில் அக்கா -தங்கை சண்டைபோடுவது போல குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் தொழில் ரீதியாக, பிரச்சினை ஏற்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் தொகுப்பாளராக தன்னுடைய ஆதிக்கத்தை, செலுத்தவிடாமல் பிரியங்கா அவருடைய ஆதிக்கத்தைச் செலுத்தியதாகக் குற்றம்சாட்டி மணிமேகலை நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

இதன் காரணமாகச் சர்ச்சை வெடித்த நிலையில், பிரியங்காவுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தது. பிறகு அவருக்கு நெருக்கமாக இருக்கும் பிரபலங்கள், ஆதரவாகக் குரல் கொடுக்க கொஞ்சம் பிரியங்கா மீது எழுந்த விமர்சனங்கள் மெல்ல மெல்ல, குறையத் தொடங்கியது. இந்த பிரச்சினையில், பிரியங்காவின் குணத்தை விமர்சிப்பதோடு அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் இந்த பிரச்சினையில் விமர்சித்தார்கள்.

தொழில் ரீதியாகப் பிரச்சினை என்றால் அதனை மட்டும் விமர்சனம் செய்யலாம் அதைவிட்டுவிட்டு அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை இழிவுபடுத்திப் பேசவேண்டாம் என்பது தான் பலருடைய கருத்தாக இருந்து வருகிறது. அதைப்போல, சண்டையை முடித்துக்கொண்டு மீண்டும் மணிமேகலை & பிரியங்கா இருவரும் ஒன்றாக இணையவேண்டும் என்பது பலருடைய ஆசையாகவும், இருந்து வருகிறது.

இந்த சூழலில், ஒரே மேடையில் பிரியங்கா மற்றும் மணிமேகலை இருந்து ஜாலியாக பேசிய வீடியோக்களும் வைரலாகி வருகிறது. அப்படி தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில் மணிமேகலை கேட்ட கேள்விகளுக்குப் பிரியங்கா பதில் அளித்துள்ளார்.

பிரியங்கா விருது வாங்கிய நிகழ்ச்சியில் மணிமேகலை தொகுப்பாளராக இருந்தார். அப்போது விருது வாங்கிக்கொண்டு மேடையில் நின்றுகொண்டிருந்தார். அப்போது மணிமேகலை அவரிடம் தொகுப்பாளர் வேலையை ராஜினாமா செய்யக்கூடிய அளவுக்குக் கடினமான நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறீர்கள் எப்படி இருக்கிறது? என்பது போலக் கேட்டார்.

அதற்குச் சிரித்துக்கொண்டே பதில் கூறிய பிரியங்கா ” இப்போது ராஜினாமா செய்வதற்கு யோசனை இல்லை…பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க விரும்புகிறேன். போட்டிக்கு வருபவர்கள் வரட்டும்…அது ஜாலியான போட்டியாகவும், சந்தோஷமான போட்டியாகவும் இருக்கவேண்டும். நாமளும் வளரவேண்டும்..நம்முடன் இருப்பவர்களும் வளரவேண்டும்” என்றார்.

தொடர்ந்து பேசிய பிரியங்கா ” என்னைப் பொறுத்தவரைச் சுற்றி இருப்பவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்து இருக்கவேண்டும் என விரும்புவேன். எனவே, நம்முடன் ஒருவர் இருக்கும்போது அவர்கள் மன நிலை சோகமாகவே இருக்கக் கூடாது என விரும்பி அவர்களைச் சந்தோசமாக வைத்திருக்க முயற்சி செய்வேன்.இப்படி தான் நான் ” எனவும் தனது குணத்தைப் பற்றிப் பேசியிருந்தார்.

முன்னதாக பிரியங்கா பேசிய இந்த வீடியோவை தற்போது பார்த்த நெட்டிசன்கள் மற்றும் அவருடைய ரசிகர்கள் இப்படிப் பேசும் பிரியங்காவை எப்படித் திட்ட மனம் வருகிறதோ எனக் கூறி வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்