இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி (நாளை) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை ஐசரி கணேஷ் வேல்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்க, படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள்ளார்.
unknown nodeவெந்து தணிந்தது காடு முதல்நாள் முதல் காட்சி தமிழகத்தில் சில இடங்களில் அதிகாலை 4.30 மணிக்கும் சில இடங்களில் 5 மணிக்கும் தொடங்குகிறது. மேலும் சிம்பு, கெளதம் மேனன், ஏ.ஆர்.ரஹ்மான் மூவரும் மூன்றாவது முறையாக இந்த படத்தின் மூலம் இணைந்துள்ளதால், படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகமாகவுள்ளது.
unknown nodeபடத்தை பார்க்க ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ள நிலையில், படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க வரும் ரசிகர்களுக்கு இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்.
இதையும் படியுங்களேன்-பட வாய்ப்பு கொடுக்காததால் மணிரத்னத்தை தூக்கி எறிந்த 2 நடிகர்கள்.!
unknown nodeஇது குறித்து சமீபத்தில் பேசிய கெளதம் மேனன் ” வெந்து தணிந்தது காடு படத்தின் முதல் நாள் முதல் (5 மணி) காட்சியை பார்க்க வரும் ரசிகர்கள் நன்றாக தூங்கிவிட்டு படத்தை பார்க்க வாருங்கள். எதற்காகவென்றால், கதை மற்றும் கதாபாத்திரத்தின் ஓட்டம் செட் ஆக கொஞ்சம் நேரம் எடுக்கும்” என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.