நீ பேசுவியா நான் பேசவா? மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினையில் லீக்கான புது வீடியோ!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஷாலினி சோயா எலிமினேட் ஆன எபிசோடில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவரும் பேசிக்கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.

priyanka deshpande vs Manimegalai

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலைக்கும் பிரியங்காவுக்கும் இடையே எழுந்த பிரச்சினை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்து தற்போது மெல்ல மெல்லக் குறைந்துள்ளது. இந்த விவகாரம் பற்றி மணிமேகலை எதாவது விழாக்கள் பேசினால் கூட கண்டிப்பாக மீண்டும் இந்த விவகாரம் பேசத்தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.

அந்த அளவுக்கு பேசுபொருளாக இவர்களுடைய பிரச்சனை கடந்த ஒரு சில வாரங்களாகப் பேசப்பட்டுக்கொண்டு இருந்தது. பிரச்சினைக்கான முக்கியமான காரணமே, நிகழ்ச்சியில், பிரியங்கா தன்னுடைய ஆதிக்கத்தைச் செலுத்தவிடாமல் அவருடைய ஆதிக்கத்தை மட்டுமே செலுத்தியதாக மணிமேகலை கூறியது தான். மணிமேகலை அப்படிக் கூறி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு பிரியங்கா மீது எதிர்மறையான விமர்சனங்கள் வீசப்பட்டது.

பிறகு அவருக்கு ஆதரவாகப் பிரபலங்கள் பேசிய பின் தான் விமர்சனம் குறைந்து பிரச்சனை குறித்த பேச்சுகளும் குறையத் தொடங்கி இருக்கிறது. முழுவதுமாக இன்னும் குறைய வில்லை என்றும் மற்றொரு பக்கம் கூறலாம். எனவே, இவர்களுடைய பிரச்சினை குறித்து நடந்த விஷயங்கள் குறித்த தகவலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட சில வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கொண்டு இருக்கிறது.

அப்படி தான் தற்போது வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி கொண்டு இருக்கிறது. அந்த வீடியோவில் நிகழ்ச்சியில் குக் ஆகக் கலந்துகொண்ட ஷாலினி சோயா எலிமினேட் ஆகிறார். இதன் காரணமாக, அங்கிருந்த போட்டியாளர்கள் மற்றும் நடுவர் ஷாலினி சோயா பற்றிப் பேசுகிறார்கள். அப்போது, ஒரு ஓரமாக நின்றுகொண்டிருந்த மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

பிரியங்கா “என்ன நான் பேசணுமா? இல்லை நீனே பேசி முடிச்சிருவியா ? உன்னால முடியும்ல ” என்கிற பாணியில் கேட்டார். அதற்கு, மணிமேகலை நீங்கள் பேசுகிறீர்கள் என்றால் பேசுங்கள் எனக்கு எமோஷனலாக பேசுவது வராது” எனக் கூறுகிறார். அத்துடன் அவர்கள் பேசும் காட்சிகள் நிறைவடைந்தது.

பிறகு மணிமேகலை ஷாலினி சோயா பற்றிப் பேசி முடித்த பிறகு வீடியோ நிறைவடைகிறது. எனவே, வீடியோ வைத்துப் பார்க்கையில், மணிமேகலை எப்படி இந்த இடத்தில் பேசவேண்டும் எனக் கேட்டுப் பேசினாரா? அல்லது பிரியங்கா மணிமேகலை திணறிவிடக் கூடாது என்பதற்காக நல்ல எண்ணத்தோடு இப்படிக் கேட்டாரா என்பது அவர்களே தெரியப் படுத்தினால் மட்டும் தான் தெரியவரும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்