விஜயகாந்த் 3 நாள் தான் பழக்கம்…ஆனா இதெல்லாம் செஞ்சாரு..நடன இயக்குனர் எமோஷனல்!

Vijayakanth
Vijayakanth : விஜயகாந்த் 3 நாள் தான் பழக்கம் ஆனால் அவர் தனக்கு உதவி செய்தார் என தினேஷ்  மாஸ்டர் தெரிவித்துள்ளார். 

கேப்டன் விஜயகாந்த் உடைய நல்ல மனதிற்கு அவரை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது என்றே கூறலாம். அந்த அளவிற்கு பிறருக்கு உதவிகளை செய்து சாப்பாடு போட்டு பலருடைய பசியை தீர்த்துள்ளார். இதன் காரணமாகவே அவர் உயிரோடு இல்லை என்றாலும் கூட அவரை பற்றி தினம் தினம் நினைத்துக்கொண்டு மக்கள், பிரபலங்கள்,  என அவரை புகழ்ந்து பேசி கொண்டு இருக்கிறார்கள்.

அந்த வகையில், பிரபல நடன இயக்குனரான தினேஷ் மாஸ்டர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட போது, விஜயகாந்த் தனக்கு 3 நாளில் பழக்கம் ஆகி பல விஷயங்களை செய்ததாக எமோஷனலாக பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” எனக்கு ரமணா படத்தின் நேரத்தில் தான் விஜயகாந்துடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது.

கிட்டத்தட்ட அந்த படத்தின் மூலம் அவருடன் 3 நாட்கள் பழகி கொண்டு இருந்தபோதே என்னை அவர் வியக்க வைத்தார். பழகி 3 நாட்கள் தான் இருக்கும் ஆனால், அவர் பல ஆண்டுகள் என்னுடன் பழகியது போல பல விஷயங்களை செய்தார். அவர் ஆரம்ப காலத்தில் நடனம் ஆடிய சீடியை மொத்தமாக எடுத்துக்கொண்டு என்னும் கொடுத்தார்.

கொடுத்துவிட்டு இதில் நான் முன்னாடி படங்களில் ஆடிய முக்கியமான நடனங்கள் எல்லாம் இருக்கிறது. கண்டிப்பாக இதனை எல்லாம் பாரு உன்னுடைய வேலைக்கு நல்ல ஐடியா கிடைக்கும் என்று கூறினார். அவர் ஒரு படத்தின் ஹீரோ நான் அவருடன் பழகியது புதிது எனவே, இதெல்லாம் சொல்லவேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை ஆனால், விஜயகாந்த் அதனை செய்தார்.

அதைப்போல, பேரரசு படத்தில் அவருடன் பணியாற்றும் போது ஒவ்வொரு நடனம் காட்சிகளும் முடிந்த பிறகு கம்ப்யூட்டரில் பார்த்துவிட்டு இது அருமையாக இருக்கிறது அது அருமையாக இருக்கிறது என என்னை ரொம்பவே பாராட்டுவார். அவர் பாராட்டும்போது நமக்கு ஒரு விதமான புத்துணர்ச்சியும் வரும். தங்கத்திலும் தங்கம் விஜயகாந்த் தான்” எனவும் தினேஷ் மாஸ்டர் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்