அப்பாவை கவனித்துக் கொள்ளவில்லை, இன்றுவரை குற்ற உணர்ச்சியாக இருக்கிறது – கதறி அழும் ரேக்கா!

Rekha said in tears today at the Big Boss house that she still feels guilty for not taking care of her father.

அப்பாவை கவனித்துக் கொள்ளாதது இன்றுவரை குற்ற உணர்ச்சியாக இருப்பதாக ரேக்கா அவர்கள் இன்று பிக் பாஸ் வீட்டில் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

இன்றுடன் 100 வது நாளாக ஒளிபரப்பபட்டுக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், இதுவரை வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களில் சுரேஷ், ஷிவானி மற்றும் அனிதா தவிர மற்ற அனைத்து போட்டியாளர்களும் தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கிறார்கள். இந்நிலையில் போட்டியாளர்கள் அனைவர் முன்பும் நின்று பேசிய ரேக்கா அவர்கள், கடந்து வந்த பாதையை குறித்து முன்னமே கூற சொல்லும் பொழுது நான் எனது அப்பா குறித்து பேசாமல் விட்டுவிட்டேன்.

அம்மா உடனே எனது பணியில் இணைந்து சென்று கொண்டிருந்ததால், அப்பாவை விட்டு விட்டு வந்து விட்டோம். அதன் பின் எனது தந்தை இறந்துவிட்டார். அவரை கவனித்துக் கொள்ளவில்லை என்பது இன்று வரையிலும் எனக்கு குற்ற உணர்ச்சியாக இருக்கிறது என மிகவும் ஏங்கி ஏங்கி அழுகிறார் ரேக்கா. வீட்டில் உள்ள மற்றவர்கள் ஆறுதல் கூறுகிறார்கள். இதோ அந்த வீடியோ,

unknown node