அம்பானி மகன் திருமண விழாவில் நடந்த சர்ச்சை? ஷாருக்கானை திட்டும் ராம் சரண் ரசிகர்கள்!

இந்த நிலையில், நிகழ்ச்சியில் நடந்த ஒரு விஷயம் சற்று சர்ச்சையாக மாறியுள்ளது. அது என்னவென்றால், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷாருக்கான் ராம் சரணை அழைக்கும் போது

shahrukh khan sad

Shah Rukh Khanஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சியின் போது ராம் சரணை மேடைக்கு அழைத்த ஷாருக்கான் அவரை அவமரியாதை செய்ததாக உபாசனா கொனிடேலாவின் ஒப்பனை கலைஞர் கூறியுள்ளது பேசும்பொருளாகியுள்ளது. மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட் இருவருக்கும் வரும் ஜூலை மாதம் 12-ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.

read more- களைகட்டும் ஜாம்நகர்… அம்பானி வீட்டு திருமணத்துக்கு வருகை தந்த பிரபலங்கள்.!

கண்டிப்பாக இவர்களுடைய திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடைபெறும் என தெரிகிறது. ஏனென்றால், அந்த அளவிற்கு திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சி நடைபெற்று இருக்கிறது. குஜராத்தின் ஜாம்நகரில் ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டத்துடன் மார்ச் 1 முதல் 3ம் தேதி (நேற்று) வரை மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், ஷாருக்கான், சல்மான் கான், ராம் சரண், அலியாபட், அமிதாப் பச்சன், மார்க் சக்கர்பெர்க், தோனி, சச்சின், பில் கேட்ஸ், உள்ளிட்ட பல பிரபலங்களும் கலந்து கொண்டார்கள். தற்போது உலகம் முழுவதும் ஆனந்த் அம்பானி திருமண நிகழ்ச்சியை பற்றி தான் பலரும் பேசி வருகிறார்கள். அந்த அளவிற்கு வெகு பிரமாண்டமாக நடைபெற்றது.

read more-ஓரமா போமா! அம்பானி மகன் திருமண விழாவில் கடுப்பான ரஜினிகாந்த்?

இந்த நிலையில், நிகழ்ச்சியில் நடந்த ஒரு விஷயம் சற்று சர்ச்சையாக மாறியுள்ளது. அது என்னவென்றால், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷாருக்கான் ராம் சரணை அழைக்கும் போது ஜாலியாக பேசிய விஷயம் தான் சர்ச்சையாக வெடித்துள்ளது. மேடையில் நாட்டு நாட்டு பாடலுக்கு ஷாருக்கான் சல்மான் கானுடன் நடனம் ஆடி கொண்டு இருந்தார்.

அப்போது ஷாருக்கான் ராம்சரணை இட்லி, சாம்பார், வடை மேடைக்கு வரவும் என்பது போல அழைத்தார். இந்த நிலையில் பாதியில் இருந்து நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த ராம் சரணின் ஒப்பனை கலைஞர் ஜெப ஹாசன் என்பவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  “நான் ஷாருக் கான் சாருடைய தீவிர ரசிகை. ஆனால் ராம் சரணை அவர் ‘இட்லி, வடை, சாம்பார்’ என்று ஒரு பெரிய மேடையில் அப்படி அழைத்து சத்தியமாக பிடிக்கவில்லை.

READ MORE –தயவு செஞ்சு தவறவிடாதீங்க! ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ பற்றி கார்த்திக் சுப்புராஜ்!

என்னை பொறுத்தவரை இது அவமரியாதையான செயல். அவர் இப்படி கூறியதன் காரணமாக நான் அந்த நிகழ்ச்சியை விட்டு பாதியிலே வெளியேறிவிட்டேன்” என்று பதிவிட்டு இருந்தார். இதனை பார்த்த ராம் சரணின் ரசிகர்கள் பலரும் ஷாருக்கான் ஒரு போது மேடையில் ஒரு நடிகரை இப்படியா அழைப்பீர்கள் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.  மேலும் ஒரு சிலர் ஷாருக்கான் மற்றும் ராம் சரண் இருவருமே நெருங்கிய நண்பர்கள் எனவே ஜாலியாக நண்பர்கள் என்பதற்காக கூட அப்படி பேசி இருக்கலாம் என்று கூறி வருகிறார்கள்.