செஸ் ஒலிம்பியாட் துவக்க திருவிழா… பாராட்டி மகிழ்ந்த சூப்பர் ஸ்டார்.! நெகிழ்ந்துபோன விக்னேஷ் சிவன்.!

Default Image

44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தற்போது சென்னை அருகே, சரித்திரப் புகழ் வாய்ந்த மாமல்லபுரம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் தொடக்க விழா பிரமாண்டமாகவும், கோலகமாகவும் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இந்த தொடக்க விழாவுக்கான கலை நிகழ்ச்சிகளை திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவன் தான் இயக்கிருந்தார். அனைவர்க்கும் பிடிக்கும் வகையில், மிகவும் பிரம்மாண்டமாக இந்த கலை நிகழ்ச்சிகள் இருந்ததால், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு ரசிகர்கள், விளையாட்டுப் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் ஆகியோர் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த், விக்னேஷ் சிவனை நேரில் பாராட்டியதோடு மட்டுமில்லாமல், போனில் தொடர்பு கொண்டும் பாராட்டியுள்ளாராம். இதனால் நெகிழ்ந்து போன விக்னேஷ் சிவன் ட்வீட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து ட்வீட்டர் ஒன்றை செய்துள்ளார்.

அதில் ” நன்றி சூப்பர் ஸ்டாருக்கு நினைவூட்டும் நிகழ்வு
நிகழ்வின் போது நேரில் வந்து பாராட்டியதற்கும் நிகழ்வு முடிந்த உடனேயே தொலைபேசி அழைப்பிற்கும். ஒலிம்பியாட் நிகழ்வில் உங்கள் குரலையும் பாராட்டுக்களையும், கேட்டதில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது” என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்