காத்திருப்பதை தவிர வேறொன்றும் செய்ய முடியாது – ராஷி கண்ணா..!!

Actress Rashi Kanna has said that she wants to play a different role

தனக்கு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை என்று நடிகை ராஷி கண்ணா கூறியுள்ளார்.

நடிகை ராஷி கண்ணா தமிழ் சினிமாவிலும் இமைக்கா நொடிகள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து, அடங்கமறு, சங்கத்தமிழன், போன்ற திரைப்படங்களில் நடித்தார். இதனை தொடர்ந்து துக்ளக் தர்பார், அரண்மனை 3, மேதாவி போன்ற திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றி அவர் கூறியது ” எனக்கு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை ஆர்வம் இருக்கிறது. ஆனால் அந்த மாதிரி வேடங்களில் நடிக்க கிடைக்கும் வாய்ப்பு அதிஷ்டம். இயக்குனர்கள் எழுதி வைத்திருக்கும் கதைகள் அந்த மாதிரி சிறந்த வாய்ப்புகள் தேடி வர வேண்டும். சினிமாவில் கதாநாயகியாக வாழ்கை எங்களுடைய கையில் இருக்காது இயக்குனர்கள் கையில்தான் இருக்கும். 100 படங்கள் வந்தால் அதில் ஒன்றிரண்டு படங்களில் நான் கதாநாயகிக்கு பெயர் கிடைக்கிறது. அந்த மாதிரியான கதாபாத்திரங்களுக்காக காத்திருப்பதை தவிர வேறு எதுவும் செய்ய முடியாது” என்றும் கூறியுள்ளார்.