இயக்குனர் சுந்தர்.C, மக்கள் ரசிக்கும் வகையில் நகைச்சுவை படங்களை எடுப்பதில் கைதேர்ந்தவர். இவர் இயக்குவதை கொஞ்சம் தள்ளிவைத்து விட்டு நடிப்பதில் கவனம் ஈர்த்தார். அதில் ஆரம்ப கால திரைப்படங்களை தவிர மற்றவை கைகொடுக்கவில்லை, இதனால் இவர் நீண்ட வருடத்திற்கு பின் இவரது இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன் வெளிவந்து சக்கைபோடு போட்ட திரைப்படம் “கலகலப்பு” இதில் சிவா, விமல், ஓவியா, அஞ்சலி, இளவரசு ஆகியோர் நடித்திருந்தனர்.
unknown nodeஇதன் இரண்டாம் பாகத்தை இப்போது படமாக்கி கொண்டுவருகிறார். இதில் கதாநாயகர்களாக ஜெய், ஜீவா, சிவா, நடிகின்றனர். கதாநாயகிகளாக நிக்கி கல்ராணி, கேத்தரின் தெரேசா, ஆகியோர் நடிகின்றனர். இதற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்.இப்படத்தின் சூட்டிங் தற்போது காசியில் நடக்கிறது. அதனை தற்போது படக்குழு அறிவித்துள்ளது.