#breaking: கவிஞர் பிறைசூடன் காலமானார்!

Tamil film songwriter and poet PiraiSoodan passed away in Chennai due to ill health.

தமிழ் திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் உடல்நல குறைவால் சென்னையில் காலமானார்.

தமிழ் திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான 65 வயதுடைய பிறைசூடன் உடல்நல குறைவால் சென்னையில் காலமானார். திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் பிறந்த பிறைசூடன் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.

தமிழில் இதுவரை 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 1,400க்கும் மேற்பட்ட பாடல்களை பிறைசூடன் எழுதியுள்ளார். செம்பருத்தி திரைப்படத்தில் நடந்தால் இரண்டடி என்ற புகழ்பெற்ற பாடலை எழுதியவரும் இவரே.

1985ல் வெளியான சிறை படத்தில் இடம்பெற்ற ராசாத்தி ரோசாப்பூ பாடல் மூலம் அறிமுகமானார். மேலும் பணக்காரன் திரைப்படத்தில் பிறைசூடன் எழுதிய நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான் என்ற பாடல் மிகவும் புகழ்பெற்றது.