தீபாவளியன்று வெளியான மெர்சல் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது, இதற்க்கு முக்கிய காரணம் அந்த படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி பற்றிய வாசனங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
unknown nodeஇதற்கு பாஜக தலைவர்கள் பலரும் எதிர்ப்பு குரல் கொடுத்தனர். இப்போது மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி ஒரு பேட்டியில் இப்படத்தை பற்றியும் விஜய் பற்றியும் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார் அதன் விபரம் பின்வருமாறு,
unknown node‘விஜய் உண்மையாகவே ஜிஎஸ்டியால் மக்களுக்கு பாதிப்பு இருக்கின்றது என்று நினைத்திருந்தால், முதல் குரல் அவருடையதாக தான் இருக்க வேண்டும்.
ஒரு கலைஞனுக்கு உள்ள ஆளுமை என்பது அரசு அவர்களை அடக்கும் போது அதை மீறி, இது தான் உண்மை என்று சொல்ல வேண்டும்.
ஆனால், அப்படி ஒரு தைரியத்தை விஜய்யிடம் நான் பார்க்கவில்லை, அது மனதிற்கு வருத்தமாக உள்ளது’ என்று அவர் கூறினார்.