உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது, இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில், இது வரை மூன்று பேர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தற்போது பிக்பாஸ் இல்லம் இரண்டு கிராமங்களாக பிரிந்துள்ளது. இதனையடுத்து, இந்த வீட்டிற்குள் மோதல்கள், குழப்பங்கள், சண்டைகள் என பல சுவாரஸ்யமான சம்பவங்கள் இடம் பெறுகிறது. இந்நிலையில், மீராமீதுன், சேரன் நியாயமாக பேசவில்லை என்று சொல்லி சேரனிடம் கோபப்படுகிறார். இதனையடுத்து, சேரன் மன்னிப்பு கேட்டு விட்டு, நான் இல்ல நான் வேற ஆளு, எல்லாரும் மன்னிச்சிருங்க என்று சொல்லிவிட்டு வருத்தத்துடன் செல்கிறார்.
unknown node