என்னைய கலரை வச்சி ஒதுக்குனாங்க, இப்போ அதனால தான் நான் இங்க வந்து நிக்கிறேன் என்று ஸ்ருதி கூறுகிறார்.
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இன்று மூன்றாவது நாள் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் முதல் புரோமோவில் ஏற்கனவே வீட்டுக்குள் சிறு சலசலப்பு ஏற்பட்டது போல காண்பிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இரண்டாவது புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
அதில் ஸ்ருதி, ஐக்கி பெர்ரி மற்றும் இசை வாணியுடன் பேசிக்கொண்டிருக்கிறார். அப்பொழுது கலரை வைத்து என்னை ஒதுக்கி உள்ளார்கள். ஆனால் அப்படி ஒதுக்கினதால் தான் தற்பொழுது நான் இங்கே இருக்கிறேன் என கண்கள் கலங்க ஸ்ருதி கூறுகிறார். எனவே இசைவாணியும் ஸ்ருதிக்கு ஆதரவாக, நம்மை ஒதுக்குகிறார்கள் என்றால் நம்மை செதுக்குகிறார்கள் என்று அர்த்தம் என கூறுகிறார். ஐக்கி பெர்ரியும் அவர்களுக்கு ஆதரவாக பேசுகிறார். இதோ அந்த புரோமோ வீடியோ,
unknown node