பிக்பாசில் ஜெயித்த பணத்தை இதுக்கா செலவு பண்ண போறாங்க…?
பிக்பாஸ் நிகழ்ச்சியானது மொத்தம் மூன்று மொழிகளில் நடத்தப்பட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று நிகழ்ச்சிகள் ஒன்றாக தொடங்கப்பட்டு, நேற்று ஒன்றாக முடிவடைந்தது.
தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மற்ற மொழி நிகழ்ச்சியை விட மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வெற்றியாளருக்கு உள்ள ரசிகர்கள் கூட்டம் கணக்கிலடங்காது.
தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கெளஷல் என்பவர் தான் வெற்றியடைந்துள்ளார். இதனையடுத்து அவருக்கு வழங்கப்பட்ட பரிசு தொகையை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக உபயோகப்படுத்த போவதாக கூறியுள்ளார்.
ஏனென்றால் தனது தாயார் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட போது முறையான சிகிச்சை அளிக்காததால், உயிரிழந்ததாக கூறியுள்ளார். அதனால் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.