#RIPBhavatharini : பாடகி பவதாரிணி உடல் நல்லடக்கம்!

bhavatarini singer

இளையராஜா மகள் பவதாரிணி உடல் அம்மா, பாட்டி நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

பவதாரிணி மறைவு 

பாடகியும் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளுமான பவதாரிணி கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், ஜனவரி 25-ஆம் தேதி காலமானார். புற்றுநோய்க்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில், இலங்ககையில் ஜனவரி 25-ஆம் தேதி காலமானார் . அவருடைய உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.

பிரபலங்கள் இரங்கல் 

மகள் பவதாரிணியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய இளையராஜா!

இலங்கையில் இருந்து கொண்டுவரப்பட்ட பவதாரிணி உடல் சென்னை தி.நகரில் உள்ள இளையராஜா வீட்டில் நேற்று அஞ்சலிக்காக  வைக்கப்பட்டு இருந்தது. கார்த்தி, விஷால், வெங்கட் பிரபு, குட்டி பத்மினி, ராதிகா, விஜய் ஆண்டனி, சிம்பு, மோகன் ராஜா, மனோஜ் பாரதிராஜா, ராமராஜன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் எல் முருகன் உள்ளிட்ட பலரும் நேரில் சென்று இரங்கலை தெரிவித்தனர்.

தேனியில் நல்லடக்கம் 

பிரத்யேக ஆம்புலன்ஸ் மூலம் நேற்று இரவு அவருடைய உடல் தேனிக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், இன்று காலை 11 மணி அளவில் அவரது உடல் தேனி வந்தது. இங்கும் பிரபலங்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். குறிப்பாக பாரதி ராஜா, இயக்குனர் அமீர் உள்ளிட்ட பலரும் வந்தனர்.

நல்லடக்கம் 

இந்த நிலையில், பவதாரணியின் உடல், தேனியில் இருக்கும் இளையராஜாவின் பண்ணை வீட்டில் அவரது தாயார் சின்னதாய் மற்றும் அவரது மனைவி ஜீவா ஆகியோரது உடல் அருகே இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்